பக்தன் எனக்கு
சித்தியோடு செழிப்பாய் -ஓர்
வாழ்வைச் சிருஸ்டித தாய்.
சிற்பியது சிறிதாகும் அதன்
முத்தின் ஒளி பெரிதாகும்.-உன்
முற்றத்திலே நான் நிற்க -மீனாட்சி
சக்தி என்னுள் வேறூன்றும்
அண்ணன் ஆனைமுகன்
என்னை ஆளும் கஜன்
அன்பின் ஒளி கொண்டு
என்னை அரவணைக்க,
வேலுடன் வேலன் வலதுபுறம்
என் வேதனை விலகிட வரம் தந்தான்.
நாளும் பொழுதும் நன்றாய் வர
நானும் தொழுதேன் நவக்கிரகம்.
தைரியம் கொண்டு
தரணியைக் காக்கும்
வைரவா உன்னை
வணங்கியே நின்றேன்.
அன்பும் அருளும் ஒன்றாய்க் கிடைக்க
என்பும் உருகி என்னை மறந்தேன்.
துன்பம் நீங்கி துயரம் மறைய
தூய்மை பெற்று வீடு கண்டேன்.